பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்தின் புதிய திட்டம்

By செய்திப்பிரிவு

புனே: பஜாஜ் பின்சர்வ் பரஸ்பர நிதி நிறுவனம், ‘பேங்கிங் அண்ட் பிஎஸ்யூ ஃபண்ட்’ (Banking and PSU fund) என்ற புதிய நிதி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், வங்கிகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

“பல்வேறு தளங்களில் முதலீடு செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்தத் திட்டம் நல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும்” என்று நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கணேஷ் மோகன் தெரிவித்துள்ளார்.

நிறுவனத்தின் தலைமை தகவல் அலுவலர் (சிஐஓ) நிமேஷ் சந்தன் கூறுகையில், “இந்தத் திட்டத்தின் கீழ் மொத்த நிதியில் 80 சதவீதம் வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்களின் கடன் பத்திரங்களிலும் 20 சதவீதம் ஏனைய பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE