சென்செக்ஸ் 316 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 316 புள்ளிகள் (0.48 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,512 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 109 புள்ளிகள் (0.56 சதவீதம்) வீழ்ந்து 19,528 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கியது. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 342.03 புள்ளிகள் சரிவடைந்து 65,486.38 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 152.20 புள்ளிகள் சரிந்து 19,486.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் எதிர்மறை சூழல், வட்டி விகிதம் அதிகரிப்பு குறித்த கவலைகள், வாகன பங்குகளின் சரிவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை வீழ்ச்சியில் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ்316.31 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,512.10 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 109.55 புள்ளிகள் வீழ்ந்து 19,528.75 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

மாருதி சுசூகி, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்எல்டபில்யூ ஸ்டீல், எம் அண்ட் எம், ஐடிசி, டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா, கோடாக் பேங்க், டிசிஎஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், விப்ரோ, பாரதி ஏர்டெல், இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE