பங்குச்சந்தையில் வீழ்ச்சி: சென்செக்ஸ் 610 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 610 புள்ளிகள் (0.92 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,508 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 192 புள்ளிகள் (0.98 சதவீதம்) வீழ்ந்து 19,523 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கி, பின் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தது. காலை 10:28 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 0.04 புள்ளிகள் உயர்வடைந்து 66,118.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 18.50 புள்ளிகள் உயர்ந்து 19,734.95 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் எதிர்மறையான சூழல், எஃப் அண்ட் ஓ மாதாந்திர காலாவதி, வெளிநாட்டு நிதி வெளியேற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஐடி பங்குகளின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தனது துவக்க ஏற்றத்தில் இருந்து சரிந்த இந்திய பங்குச் சந்தைகள் வர்த்தகத்தின் பிற்பகுதியில் கடும் வீழ்ச்சி கண்டன. இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 610.37 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,508.32 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 193.00 புள்ளிகள் வீழ்ந்து 19,523.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வடைந்திருந்தன.

டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, எம் அண்ட் எம், இன்போசிஸ், ஐடிசி, கோடாக் மகேந்திரா பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE