சென்செக்ஸ் 173 புள்ளிகள் உயர்வு 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 173 புள்ளிகள் (0.26 சதவீதம்) உயர்வடைந்து 66,118 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 107 புள்ளிகள் (0.55 சதவீதம்) உயர்ந்து 19,716 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:24 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 345.72 புள்ளிகள் சரிவடைந்து 65,599.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25.35 புள்ளிகள் சரிந்து 19,583.70 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், இந்திய சந்தையில் ‘நோமுரா’ தன்னுடைய நிலையை நியுட்ரலில் இருந்து ஓவர்வெயிட் ஆக மாற்றியதால் வர்த்தகத்தின் பிற்பாதியில் ஏற்றமடைந்த இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை லாபத்துடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 173.22 புள்ளிகள் உயர்வடைந்து 66,118.69 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
107.40 புள்ளிகள் உயர்ந்து 19,716.45 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, ஐடிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ராடெக் சிமெண்ட், விப்ரோ, இன்போசிஸ், டெக் மகேந்திரா, டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ்,டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், டாடா ஸ்டீல், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE