சென்செக்ஸ் 79 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 78 புள்ளிகள் (0.12 சதவீதம்) சரிவடைந்து 65,945 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் (0.05 சதவீதம்) சரிந்து 19,664 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாகத் தொடங்கின. காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 66,012.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி11.35 புள்ளிகள் உயர்ந்து 19,685.90 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 78.22 புள்ளிகள் சரிவடைந்து 65,945.47 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.85 புள்ளிகள் வீழ்ந்து 19,664.70 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, ஐடிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE