சென்செக்ஸ் 570 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 570 புள்ளிகள் (0.85 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,230 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 150 புள்ளிகள் (0.80 சதவீதம்) வீழ்ந்து 19,742 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடன் தொடங்கின. காலை 10:33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 498.77 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,302.07 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 141.85 புள்ளிகள் சரிந்து 19,759.55 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அப்படியே வைத்திருக்க முடிவு செய்த போதிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த விகித்தை மேலும் உயர்த்தலாம் என்ற முன்னறிவிப்பை வெளிப்படுத்தி இருப்பதால் உலகளாவிய சந்தைகள் வீழ்ச்சியடைந்தன. இதனால் இந்திய பங்குச்சந்தைகளும் மூன்றாவது நாளும் வீழ்ச்சியில் நிறைவடைந்தது. தனியார் வங்கிப் பங்குகள் கடும் வீழ்ச்சி கண்டிருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 570.60 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,230.24 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 159.05 புள்ளிகள் வீழ்ந்து 19,742.35 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, இன்போசிஸ், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா மோட்டார்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், விப்ரோ, டைட்டன் கம்பெனி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE