மீண்டும் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை | சென்செக்ஸ் 151 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயர்வடைந்து 67,756 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 62 புள்ளிகள் உயர்ந்து 20,165 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை புதிய ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 151.52 புள்ளிகள் உயர்வடைந்து 67,670.52 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54.00 புள்ளிகள் உயர்ந்து 20,157.10 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதமான சூழல், அமெரிக்க வட்டி விகித உயர்வு மீதான கவலை குறித்த நம்பிக்கையான நிலை போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இரண்டாவது நாளாக மீண்டும் புதிய உச்சத்தில் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், பஜாஜ் பின்சர்வ், மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி, ஐடிசி, பாரதி ஏர்டெல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் உயர்வில் இருந்தன.

ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், டைட்டன் கம்பெனி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

20 mins ago

வணிகம்

17 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்