சென்செக்ஸ் 94 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சற்றே ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 94 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்வடைந்து 67,221 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3 புள்ளிகள் (0.02 சதவீதம்) சரிந்து 19,993 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. என்றபோதிலும் வர்த்தக நேரத்தின்போது வீழ்ச்சி அடைந்தது. காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.99 புள்ளிகள் சரிவடைந்து 67,037.09 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.95 புள்ளிகள் சரிந்து 19,951.40 ஆக இருந்தது.

நேற்றைய லாபத்தின் நீட்சியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின. நிஃப்டி புதிய உச்சத்தைத் தொட்டது. என்றாலும் முதலீட்டாளர்களின் எச்சரிக்கை உணர்வு காரணமாக ஏற்ற இறக்கம் காணத் தொடங்கியது. உலகளாவிய சந்தைகளின் கலப்பு சூழல்களுக்கு மத்தியில், சில்லறை பணவீக்கம் குறித்த எச்சரிக்கை காரணமாக சென்செக்ஸ் சற்றே ஏற்றத்திலும், நிஃப்டி சரிவிலும் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 94.05 புள்ளிகள் உயர்வடைந்து 67,221.13 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.10 புள்ளிகள் சரிந்து 19,993.20 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டிசிஎஸ், எல் அண்ட் டி, இன்போசிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி, கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE