பங்குச்சந்தை | சென்செக்ஸ் 89 புள்ளிகள் சரிவு 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 301 புள்ளிகள் உயர்வடைந்து 67,428 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 20,079 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. என்றுபோதிலும் வர்த்தக நேரத்தின் போது வீழ்ச்சி அடைந்தது. காலை 10:40 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 89.99 புள்ளிகள் சரிவடைந்து 67,037.09 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.95 புள்ளிகள் சரிந்து 19,951.40 ஆக இருந்தது.

ஆசிய சந்தைகளின் குழப்பமான போக்குகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்களிடம் நிலவிய நம்பிக்கைக் காரணமாக நேற்றைய ஏற்றத்தின் நீட்சியாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றயை வர்த்தகத்தை லாபத்தில் தொடங்கின. ஏன்றாலும் ஆகஸ்ட் மாத பணவீக்கம் குறித்த தகவல் வெளியாக இருப்பதால் வர்த்தக நேரத்தின் போது தடுமாறத் தொடங்கி சரிவைச் சந்தித்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, டிசிஎஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

பவர்கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், விப்ரோ, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி, டெக் மகேந்திரா பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE