மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸில் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருவிழா

By செய்திப்பிரிவு

சென்னை: மலபார் கோல்டு அண்டு டைமண்ட் ஜூவல்லரியில் `நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகள் திருவிழா' வரும் 17-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து மலபார் குழுமத்தின் தலைவர் எம்.பி. அகமது கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஷோரூம்களிலும் நவரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறும் இந்த திருவிழாவில் இடம் பெற்றுள்ள பல்லாயிரக்கணக்கான கம்மல், இயற்கையான கற்கள், சான்றளிக்கப்பட்ட நவரத்தினங்கள் பதிக்கப்பட்ட நகைகள் வாடிக்கையாளர்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அந்த அளவுக்கு அவை தரமான நகைகளாகும்.

நியாயமான விலை, திரும்ப வாங்கிக் கொள்ளும் உத்தரவாதம் ஆகியவை அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும். எங்கள் ஷோரூமில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு நகையுடனும், மலபாரின் 10 வாக்குறுதிகள் அளிக்கப்படுகின்றன. இதனால் வாடிக்கையாளர்களின் பணத்துக்கும் உரிய மதிப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Loading...

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE