பங்குச்சந்தைகள் | சென்செக்ஸ் 55 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 74 புள்ளிகள் உயர்வடைந்து 66,340 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25 புள்ளிகள் உயர்ந்து 19,752 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:42 மணி நிலவரப்படி, சென்செக்ஸ்
55.46 புள்ளிகள் உயர்வடைந்து 66,321.02 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.60 புள்ளிகள் சரிந்து 19,755.65 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் மந்தமான சூழல்களுக்கு மத்தியில் எனர்ஜி பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதியை ஏற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக்சிமெண்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன.

டாடா ஸ்டீல், நெஸ்ட்ஸ்லே இந்தியா, ரிலையன்ஸ் இன்ட்ஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டெக் மகேந்திரா பேங்க், ஜியோ ஃபைனான்ஸியல், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் ஐடிசி, விப்ரோ பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE