சென்செக்ஸ் 385 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 385 புள்ளிகள் (0.58 சதவீதம்) உயர்வடைந்து 66,265 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 116 புள்ளிகள் (0.59 சதவீதம்) உயர்ந்து 19,727 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை தட்டையாக தொடங்கின. பின்னர் ஏற்ற இறக்கம் காண தொடங்கின. காலை 10:07 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 91.32 புள்ளிகள் சரிவடைந்து 65,789.20 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21.70 புள்ளிகள் சரிந்து 19,589.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலப்பு சூழல்களுக்கு மத்தியில் தட்டையாகத் தொடங்கிய பங்குச் சந்தைகள் வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கம் காணத் தொடங்கியன. பெரும்பாலான நேரம் தடுமாற்றத்துடன் சென்ற வர்த்தகம் கடைசி நேரத்தில் வங்கி மற்றும் பொறியியல் பங்குகளின் எழுர்ச்சியால் ஏற்றம் பெற்ற இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஐந்தாவது நாளாக ஏற்றத்தில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 385.04 புள்ளிகள் உயர்வடைந்து 66,265.56 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 116.00 புள்ளிகள் உயர்ந்து 19,727.05 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எல் அண்ட் டி, இன்ட்ஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், டாடா ஸ்டீல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, ஜியோ ஃபைனான்சியல், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், இன்போசிஸ், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE