சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 152 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயர்வடைந்து 65,780 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்ந்து 19,574 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:21 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 148.14 புள்ளிகள் உயர்வடைந்து 65,776.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 50.45 புள்ளிகள் உயர்ந்து 19,579.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் ஏற்ற இறக்கமான போக்குகளுக்கு மத்தியில், எஃப்எம்சிஜி, பார்மா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐடி பங்குகளின் நீடித்த லாப விற்பனையால் மூன்றாவது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 152.12 புள்ளிகள் உயர்வடைந்து 65,780.26 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 46.10 புள்ளிகள் உயர்ந்து 19,574.90 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், எல் அண்ட் டி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, என்டிபிசி, ல்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எம் அண்ட் எம், பஜார் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE