மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்ற இறக்கமின்றித் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 7 புள்ளிகள் உயர்வடைந்து 64,838 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 19,270 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது உயர்வடைந்தன. காலை 11:14 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 211.77 புள்ளிகள் உயர்வடைந்து 65,043.18 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 86.00 புள்ளிகள் உயர்ந்து 19,339.80ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் கலப்பு சூழல்கள், இன்று வெளியாகவிருக்கும் அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகள் குறித்த முதலீட்டாளர்களின் எச்சரிக்கை போன்ற காரணங்களால் ஏற்ற இறக்கமின்றி சந்தை தொடங்கினாலும், ஜியோ ஃபைனான்சியல், உலோக பங்குகளின் உயர்வால் வர்த்தக நேரத்தின் போது உயர்வடைந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், மாருதி சுசூகி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டெக் மகேந்திரா, இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், எம் அண்ட் எம், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், கோடாக் மகேந்திரா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி,இன்போசிஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.
» வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைப்பு: சென்னையில் ரூ.1695-க்கு விற்பனை
» 2 ஆண்டுகளில் ஜவுளி ஏற்றுமதி 776 பில்லியன் டாலராக உயர்வு - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெருமிதம்
ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.