ஆக.30, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 30) சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (புதன்கிழமை) கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,530-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.44,240-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,000-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 00.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,700 ஆக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE