பங்குச்சந்தை | சென்செக்ஸ் 330 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தை இன்று காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 330.44 புள்ளிகள் உயர்வடைந்து 65,406.26 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று (புதன்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 296 புள்ளிகள் உயர்வடைந்து 65,372 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 85 புள்ளிகள் உயர்ந்து 19,428 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியிருந்தன. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 330.44 புள்ளிகள் உயர்வடைந்து 65,406.26 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 93.95 புள்ளிகள் உயர்ந்து 19,436.60 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்தில் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஜியோ ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலாஜிஸ், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, பாரதி ஏர்டெல், டெக் மகேந்தி்ரா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ், சன்பார்மா இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், இன்ட்ஸ்இன்ட் பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பங்குகள் உயர்வில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE