சென்செக்ஸ் 110 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 110 புள்ளிகள் (0.17 சதவீதம்) உயர்வடைந்து 64,996 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40 புள்ளிகள் (0.21 சதவீதம்) உயர்ந்து 19,306 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை உயர்வுடன் தொடங்கியிருந்தாலும் வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கத்துடன் பயணித்தது. காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 91.68 புள்ளிகள் உயர்வடைந்து 64,978.19 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.90 புள்ளிகள் உயர்ந்து 19,279.70 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவரின் குறைவான வட்டி விகித உயர்வு நிலைப்பாடு, சந்தைகளை ஆதரிக்கும் சீன அதிகாரிகளின் நடவடிக்கைகளை மூதலீட்டாளர்கள் கொண்டாடியதால் இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை வர்த்தகத்தை லாபத்தில் நிறைவு செய்தன. நிதிப்பங்குகள் சந்தையின் உயர்வுக்கு வழிவகுத்தாலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்துக்கு பின்னர் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிட், ஜியோ ஃபைனான்சியல் சர்வீஸ் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 110.09 புள்ளிகள் உயர்வடைந்து 64,996.60 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 40.20 புள்ளிகள் உயர்ந்து 19,306.05 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டைட்டன் கம்பெனி, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டெக் மகேந்திரா, இன்போசிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE