சென்செக்ஸ் 365 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 365 புள்ளிகள் (0.56 சதவீதம்) சரிவடைந்து 64,886 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 120 புள்ளிகள் (0.62 சதவீதம்) சரிந்து 19,265 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை கடும் வீழ்ச்சியுடன் தொடங்கின. காலை 10:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 411.06 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,841.28 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 65.55 புள்ளிகள் உயர்ந்து 19,321.15 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல், இந்திய ரிசர்வ் வங்கியின் எம்பிசி அறிக்கையால் எழுந்துள்ள பணவீக்கம் குறித்த அச்ச உணர்வு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதியை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. இதன்மூலம் தொடர்ந்து 5 வாரங்களாக பங்குச்சந்தைகள் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளன. பெரும்பாலான பங்குகள் சரிவைச் சந்தித்திருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 365.83 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 64,886.51ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 120.90 புள்ளிகள் வீழ்ந்து 19,265.80 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பஜாஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

இன்டஸ்இன்ட் பேங்க், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்டஸ், ஜியோ ஃபைனான்ஸியல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஐடிசி, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், என்டிபிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, நெஸ்ட்லே இந்தியா, மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், டிசிஎஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE