பங்குச்சந்தை | சென்செக்ஸ் 84 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 40 புள்ளிகள் உயர்வடைந்து 65,256 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 16 புள்ளிகள் உயர்ந்து 19,409 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்ற இறக்கமின்றி தட்டையாகவே தொடங்கின. காலை 10:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 84.21 புள்ளிகள் உயர்வடைந்து 65,300.30 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 19.00 புள்ளிகள் உயர்ந்து 19,412.60 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் கலவையான சூழல்கள், சீனாவின் பொருளாதார சீரழிவு, அமெரிக்க வட்டி விகித உயர்வு குறித்த அச்சம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற இறக்கமின்றியே இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலைன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

டைட்டன் கம்பெனி, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

19 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்