சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 267 புள்ளிகள் (0.41 சதவீதம்) உயர்வடைந்து 65,216 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83 புள்ளிகள் (0.43 சதவீதம்) உயர்ந்து 19,393 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வார முதல் நாள் வர்த்தகத்தை சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 23.30 புள்ளிகள் உயர்வடைந்து 64,971.96 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.30 புள்ளிகள் சரிந்து 19,314.45 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் குழப்பமான சூழல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகளின் வீழ்ச்சிக்கு மத்தியில் தகவல் தொழில்நுட்பம், நிதி, உலோகம், அதானி குழும பங்குகளின் ஏற்றத்தால் இரண்டு நாள் வீழ்ச்சிக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன. பெரும்பாலான பங்குகள் லாபத்தில் இருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 267.43 புள்ளிகள் உயர்வடைந்து 65,216.09 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 83.40 புள்ளிகள் வீழ்ந்து 19,393.60 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை பவர்கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனானஸ், இன்டஸ்இன்ட் பேங்க், பாரதி ஏர்டெல், என்டிபிசி, ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன் கம்பெனி, டாடா ஸ்டீல், எல் அண்ட் டி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், விப்ரோ, டெக் மகேந்திரா, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எம் அண்ட் எம், மாருதி சுசூகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE