திண்டுக்கல்: ஓணம் பண்டிகை கொண்டாட்டத் துக்கு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து 10 டன் வாடாமல்லி பூக்களை கேரள மாநில வியா பாரிகள் வாங்கிச் சென்றனர்.
கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை நேற்று தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் இவ்விழா நடைபெறுகிறது. இதையொட்டி கேரள மக்கள் தங்கள் வீடுகளில் பல வண்ணப் பூக்களை கொண்டு அத்தப்பூ கோலம் இடுவர். இதற்காக தமிழகத்தில் இருந்து பல வண்ணப் பூக்களை கேரள வியாபாரிகள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர்.
இதில் முக்கியமான பூ வாடாமல்லி. அதிக நாட்கள் இந்த பூ வாடாமல் இருப்பதால் கேரள வியாபாரிகள் இதை வாங்கி செல்கின்றனர். சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ வாடா மல்லி பூ ரூ.40 வரை விற்ற நிலையில் தற்போது வரத்து அதிகரித்ததால் கிலோ ரூ.15 முதல் ரூ.20-க்கு விற்றது.
தேவை அதிகரித்தபோதும், வரத்து அதைவிட அதிகரித்ததால் ஓணம் பண்டிகை நாட்களில் அதிக விலைக்கு விற்கும் என்று எதிர்பார்த்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விலை குறைவு காரணமாக கேரள வியாபாரிகள் அதிகளவில் வாடாமல்லி பூக்களை கொள்முதல் செய்து கேரள மாநிலத்துக்கு அனுப்பி வைத்தனர்.
» பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் விரைவான தங்க கடன் சேவைக்காக 251 கோல்டு லோன் ஷாப்கள் திறப்பு
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இருந்து மட்டும் நேற்று லாரிகளில் 10 டன் வாடாமல்லி பூக்கள் பாலக்காடு, கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 10 நாட்கள் பண்டிகை என்பதால், கேரளாவில் இருந்து ஆர்டர் பெற்று தினமும் பூக்களை வாங்கி அனுப்புவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
6 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
7 days ago
வணிகம்
8 days ago