கினாரா கேபிடல் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கும் நிதி தொழில்நுட்ப நிறுவனமான கினாரா கேபிடல், 2023-24 நிதி ஆண்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரூ.1,100 கோடி கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கினாரா கேபிடல் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி திருநாவுக்கரசு கூறுகையில், “2012-ல் தொடங்கப்பட்ட கினாரா கேபிடல் நிறுவனம் இதுவரை 33,000 நிறுவனங்களுக்கு ரூ.1,960 கோடி கடன் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2022-23 நிதி ஆண்டில் ரூ.656 கோடி கடன் வழங்கியுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.1,100 கோடி கடன் வழங்கதிட்டமிட்டுள்ளோம். பெண்தொழில்முனைவோருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்குகிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE