சென்செக்ஸ் 388 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 388 புள்ளிகள் (0.59 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,151 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99 புள்ளிகள் (0.51 சதவீதம்) வீழ்ந்து 19,365 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது சரிவை நோக்கிச் சென்றன. காலை 10:11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 196.51 புள்ளிகள் சரிவடைந்து 65,342.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67.70 புள்ளிகள் சரிந்து 19,397.30 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழல், வாராந்திர எஃப் அண்ட் ஓ காலாவதி ஆகியவைகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை கடும் வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன. பெரும்பாலான பங்குகள் வீழ்ச்சியில் இருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 388.40 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,151.02 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 99.70 புள்ளிகள் வீழ்ந்து 19,365.30 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், டெக் மகேந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்டஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், மாருதி சுசூகி, ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எம் அண்ட் எம் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE