பங்குச்சந்தை | சென்செக்ஸ் 196 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை சற்றே சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 41 புள்ளிகள் சரிவடைந்து 65,497 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21 புள்ளிகள் சரிந்து 19,444 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இன்று ஏற்ற இறக்கமின்றி தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தின் போது சரிவை நோக்கிச் சென்றன. காலை 10:11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 196.51 புள்ளிகள் சரிவடைந்து 65,342.91 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67.70 புள்ளிகள் சரிந்து 19,397.30 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழல், பணவீக்க அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள வட்டிவிகித உயர்வு குறித்த அச்சம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை வீழ்ச்சியுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன.

ஐடிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, இன்போசிஸ், டிசிஎஸ், எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE