சென்னை: சென்னை தண்டையார்பேட்டை பாபு ஜெகஜீவன் ராம் மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழாவில், சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுனில் பாலிவால் பேசியதாவது: சென்னை துறைமுகம் இந்த ஆண்டில் 48.95 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. கடந்த 2022-23-ம் ஆண்டில் சென்னை துறைமுகம் ரூ.156.06 கோடி நிகர உபரி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் ஈட்டிய அதிகபட்ச வருவாய் ஆகும்.
சென்னை துறைமுகம் - மதுரவாயல் புதிய உயரடுக்கு மேம்பாலம், மப்பேட்டில் சரக்கு பூங்காஆகியவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். இவை சென்னை துறைமுகத்தின் வளர்ச்சிக்கும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும் முக்கிய பங்கு வகிக்கும்.துறைமுக பள்ளி, விளையாட்டு மைதானம் ஆகியவையும் சரிசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.