பங்குச்சந்தை | சென்செக்ஸ் 39 புள்ளிகள் சரிவு 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை சற்றே ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 56 புள்ளிகள் உயர்வடைந்து 66,009 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 21 புள்ளிகள் உயர்ந்து 19,618 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாளில் ஏற்ற இறக்கமின்றி தொடங்கியது. பின்னர் சரிவடையத் தொடங்கின. காலை 10:18 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 39.27 புள்ளிகள் சரிவடைந்து 65914.21 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 4.80 புள்ளிகள் உயர்ந்து 19,602.10 ஆக இருந்தது.

அமெரிக்க பெடரல் வங்கியின் வீக்க தவுகள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் வட்டி விகித கொள்கை வெளியாக இருப்பதால் முசலீட்டாளர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருந்தனர். இதனால் பங்குச்சந்தைகள் சீரான வேகத்துடனேயே தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சரியத் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டெக் மகேந்திரா, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, மாருதி சுசூகி, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், என்டிபிசி, ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

பவர் கிரிடு கார்ப்பரேஷன், எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், இன்போசிஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், ஐடிசி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE