பங்குச்சந்தை | சென்செக்ஸ் 167 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இன்று காலை10:10 மணி நிலவரப்படி, சென்செக் 167.47 புள்ளிகள் உயர்வடைந்து 65,888.72 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 181 புள்ளிகள் உயர்வடைந்து 65,903 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 19,570 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகள் இந்த வாரத்தின் முதல் வர்த்தக நாளை ஏற்றத்துடன் தொடங்கின. காலை10:10 மணி நிலவரப்படி, சென்செக் 167.47 புள்ளிகள் உயர்வடைந்து 65,888.72 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 19,544.90 ஆக இருந்தது. உலகளாவிய சந்தைகளில் நிலவும் மந்தமான சூழல்களுக்கு மத்தியில், வலுவான காலாண்டு அறிக்கைகளால் இந்திய பங்குச் சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, அல்டரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், விப்ரோ, ஐடிசி பங்குகள் உயர்வில் இருந்தன. நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE