சென்செக்ஸ் 542 புள்ளிகள் வீழ்ச்சி 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமையும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 542 புள்ளிகள் (0.82 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 65,240 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 144 புள்ளிகள் (0.74 சதவீதம்) வீழ்ந்து 19,381 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. வர்த்தக நேரத்தின் போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக் 136.65 புள்ளிகள் சரிவடைந்து 65,646.13 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 32.55 புள்ளிகள் சரிந்து 19,494.00 ஆக இருந்தது.

தரநிர்ணய நிறுவனமான ‘ஃபிட்ச்’ அமெரிக்காவின் கடன் தரத்தை ஒரு புள்ளி குறைத்ததால் உருவான அழுத்தம் உலகளாவிய சந்தைகளை வீழ்ச்சியடையச் செய்துள்ளது. அதன் எதிரொலி, நிதி மற்றும் வங்கிப்பங்குகளின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 542.10 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,240.68 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 144.80 புள்ளிகள் உயர்ந்து 19,381.70 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்போசிஸ், என்டிபிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

பஜாஜ் ஃபின்சர்வ், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், இன்டஸ்இன்ட் பேங்க், எம் அண்ட் எம், மாருதி சுசூகி, ஆக்ஸிஸ் பேங்க், எல் அண்ட் டி, ஐடிசி, விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE