பங்குச்சந்தை | சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமையும் சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 262 புள்ளிகள் சரிவடைந்து 65,519 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 74 புள்ளிகள் சரிந்து 19,451 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. வர்த்தக நேரத்தின் போது நிலையில்லாமல் பயணித்தது. காலை 10:14 மணி நிலவரப்படி, சென்செக் 136.65 புள்ளிகள் சரிவடைந்து 65,646.13 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 32.55 புள்ளிகள் சரிந்து 19,494.00 ஆக இருந்தது.

கடன் தர நிறுவனமான ஃபிட்ச் அமெரிக்காவின் கடன் தரத்தினை ஒரு புள்ளிகள் இறக்கியதால் உலகளாவிய சந்தைகளில் நிலவிய வரும் பாதகமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஐடிசி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன.

டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபின்சர்வ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா ஸ்டீல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், டெக் மகேந்திரா, டிசிஎஸ், விப்ரோ, இன்டஸ்இன்ட் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சுசூகி, எம் அண்ட் எம், கோடாக் மகேந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE