சென்செக்ஸ் 676 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 676 புள்ளிகள் (1.02 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,527 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 207 புள்ளிகள் (1.05 சதவீதம்) வீழ்ந்து 19,526 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியன. காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 512.60 புள்ளிகள் சரிவடைந்து 65,946.71 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 132.40 புள்ளிகள் சரிந்து 19,601.15 ஆக இருந்தது.

தரநிர்ணய நிறுவனமான ‘ஃபிட்ச்’ அமெரிக்காவின் கடன் தரத்தை AAA விலிருந்து AA+ ஆக ஒரு புள்ளி குறைத்ததால் உருவான அழுத்தம் காரணமாக உலகளாவிய சந்தைகளின் வீழ்ச்சி, தொடர்ச்சியான வெளிநாட்டு நிதியின் வெளியேற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் 1 சதவீதத்துகும் மேல் வீழ்ச்சியடைந்தது. வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ் 954 புள்ளிகளும், நிஃப்டி 291 புள்ளிகளும் சரிவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 676.53 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 65,782.78 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 207.00 புள்ளிகள் உயர்ந்து 19,526.50 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், டெக் மகேந்திரா பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், என்டிபிசி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, ஆக்ஸிஸ் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃசி பேங்க், பவர்கிரிடு கார்ப்பரேஷன், இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எம் அண்ட் எம், டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE