பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 512 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 280 புள்ளிகள் சரிவடைந்து 66,179 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 84.30 புள்ளிகள் சரிந்து 19,649 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கின. காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 512.60 புள்ளிகள் சரிவடைந்து 65,946.71 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 132.40 புள்ளிகள் சரிந்து 19,601.15 ஆக இருந்தது.

அமெரிக்க, ஐரோாப்பிய சந்தைகள், சீனப்பொருளாதார குறிப்புகளால் உந்தப்பட்ட உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளும் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, பஜாஜ் பின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, டெக் மகேந்திரா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, மாருதி சுசூகி, ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, டிசிஎஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

4 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

22 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

8 days ago

மேலும்