மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 80 புள்ளிகள் சரிவடைந்து 66,079 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 19,618 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது.என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சீரடையத் தொடங்கியது. காலை 10:17 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 78.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,238.62 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 11.60 புள்ளிகள் உயர்ந்து 19,657.65 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளில் நிலவும் மந்தமான சூழல், முக்கியான ஹெவிவெயிட் பங்குகள் நிதியியல் மற்றும் நுகர்வோர் பங்குகளின் சரிவு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. என்றாலும் வர்த்தக நேரத்தின் போது சீரடையத் தொடங்கியது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பவர்கிரிடு கார்ப்பரேஷன், டாடா ஸ்டீல், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டிசிஎஸ், விப்ரோ, டெக் மகேந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்ட்லே இந்தியா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்போசிஸ், ஆக்ஸிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், இன்டஸ்இன்ட் பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன.
ஏசியன் பெயின்ட்ஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, ஐடிசி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், எம் அண்ட் எம் பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
9 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
7 days ago