சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன.சென்செக்ஸ் 106 புள்ளிகள் (0.16 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,106 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13 புள்ளிகள் (0.07 சதவீதம்) வீழ்ந்து 19,6460 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 211 புள்ளிகள் சரிவடைந்து 66,054.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23.70 புள்ளிகள் சரிந்து 19,636.20 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிதி மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் விற்பனை அழுத்தத்தின் காரணமாக ஒரு நிலையில்லாத வர்த்தக நாளை இந்தியப் பங்குச்சந்தைகள் சந்தித்தன. இன்ட்ரா வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 65,879 வரை குறைந்தது. இருந்தாலும் தாமதமாக மீண்டெழுந்தாலும் வாரத்தின் இறுதி நாள் வர்த்தகத்தை வீழ்ச்சியுடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 106.62 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66160.20 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 13.85 புள்ளிகள் வீழ்ந்து 19,646.05 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை என்டிபிசி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபைனான்ஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா, மாருதி சுசூகி, எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE