ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கமின்ற தட்டையாக நிறைவடைந்தன. சென்செக்ஸ் 29 புள்ளிகள் (0.04 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 66,355 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயர்ந்து 19,680 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.31 புள்ளிகள் உயர்வடைந்து 66,421.09 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 03.90 புள்ளிகள் உயர்ந்து 19,676.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் எதிர்மறையான சூழல், நுகர்வோர் பங்குகளின் சரிவு போன்ற காரணங்களால் நிலையில்லாமல் பயணித்த இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்ததது. இன்றைய ஆரம்ப வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் 66,559 ஆக உயர்ந்தும், 66,178 ஆக குறைந்தும் காணப்பட்டது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 29.07 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 66,355.71ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.30 புள்ளிகள் உயர்ந்து 19,680.60 ஆக இருந்தது

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், என்டிபிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் பங்குகள் உயர்வடைந்திருந்தன.

ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், கோடாக் பேங்க், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE