பங்குச்சந்தையில் ஏற்றம்: சென்செக்ஸ் 190 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை புதிய ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 321 புள்ளிகள் உயர்வடைந்து 66,911 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79 புள்ளிகள் உயர்ந்து 19,790 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 190.83 புள்ளிகள் உயர்வடைந்து 66,780.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 54.25 புள்ளிகள் உயர்ந்து 19,765.70 ஆக இருந்தது.

வங்கி மற்றும் நிதி பங்குகளின் வலுவான செயல்திறன் காரணமாக வர்த்த தொடக்கத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு பங்குச்சந்தைகள் புதிய உச்சத்துடன் தொடங்கியது. நிஃப்டி இதுவரை இல்லாத அளவுக்கு 19,800-ஐ கடந்தது. உலகளாவிய சந்தைகளின் கலப்புச் சூழல் காரணமாக பின்னர் சற்றுத் தடுமாறத் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்திய பங்குகள் உயர்வில் இருந்தன.

டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், டெக் மகேந்திரா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ், எம் அண்ட் எம், விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஐடிசி, பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE