பங்குச்சந்தை | சென்செக்ஸ் 213 புள்ளிகள் உயர்வு 

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தையில் இன்று காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 213.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,274.32 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 69 புள்ளிகள் உயர்வடைந்து 66,130 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26 புள்ளிகள் உயர்ந்து 19,591 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இந்த வாரத்தின் முதல் நாள் வர்த்தகம் தொடக்கத்தில் அதன் புதிய உச்சத்தை அடைந்திருந்தது. வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கமின்றி தட்டையாக மாறிய பங்குச்சந்தை தகவல் தொழில் நுட்ப பங்குகளின் வாங்தல்களால் மீண்டும் உச்சத்தை எட்டியது. காலை 10:04 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 213.42 புள்ளிகள் உயர்வடைந்து 66,274.32 ஆக இருந்தது. சென்செக்ஸ்-ன் இந்த உயர்வு வாழ்நாள் உயர்வு என்பது கவனிக்கத்தக்கது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 41.35 புள்ளிகள் உயர்ந்து 19,605.85 ஆக இருந்தது.

ஆசிய சந்தைகளின் பலவீனமான சூழல்களுக்கு மத்தியிலும், இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்திலேயே தொடங்கின. முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் முதல் காலாண்டு அறிக்கை வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தில் பெரும்பாலானத் துறைகள் ஏற்றத்தில் இருந்தன.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை விப்ரோ, இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டெக் மகேந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டிசிஎஸ், ஐடிசி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா இன்டஸ்ட்ரீஸ், கோடாக் மகேந்திரா, எம் அண்ட் எம், டைட்டன் கம்பெனி, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குள் உயர்வடைந்திருந்தன.

பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், பஜாஜ் ஃபிசர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE