பங்குச்சந்தை | சென்செக்ஸ் 141 புள்ளிகள் உயர்வு  

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தையில் இன்று காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 141.19 புள்ளிகள் உயர்வடைந்து 65,700.08 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 297 புள்ளிகள் உயர்வடைந்து 65,856 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 94 புள்ளிகள் உயர்ந்து 19,507 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 141.19 புள்ளிகள் உயர்வடைந்து 65,700.08 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 24.70 புள்ளிகள் உயர்ந்து 19,438.45 ஆக இருந்தது. அமெரிக்க பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட 0.1 சதவீதமாக உயர்ந்தது உலகளாவிய சந்தைகளின் உணர்வுகளைத் தூண்டி அதன் சாதகமான போக்கிற்கு உதவியது. இதன் காரணமாகவும் தகவல் தொழில்நுட்ப பங்குகளின் எழுச்சி காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா, டாடா ஸ்டீல், விப்ரோ, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், என்டிபிசி, எம் அண்ட் எம், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனானஸ், பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட், டைட்டன் கம்பெனி பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE