புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை | சென்செக்ஸ் 636 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தை இன்று காலை 10:25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 636.93 புள்ளிகள் உயர்வடைந்து 66,030.83 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் வியாழக்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 322 புள்ளிகள் உயர்வடைந்து 65,716 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 93 புள்ளிகள் உயர்ந்து 19,477 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக நேரத்தின் போது அது புதிய உச்சத்தை அடந்தது. காலை 10:25 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 636.93 புள்ளிகள் உயர்வடைந்து 66,030.83 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 164.45 புள்ளிகள் உயர்ந்து 19,548.75 ஆக இருந்தது. அமெரிக்க பணவீக்கம் ஒரு மந்தமான போக்கினை காட்டியதாலும், உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதமான சூழல்கள் காரணமாகவும் இந்திய பங்குச்சந்தைகள் நேற்றைய சரிவில் இருந்து மீண்டு இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டிசிஎஸ், இன்போசிஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஜெஎஸ்டபில்யூ ஸ்டீல், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் உயர்வில் இருந்தன. பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, என்டிபிசி பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE