பங்குச்சந்தை | சென்செக்ஸ்  397 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தையில் இன்று காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 397.47 புள்ளிகள் உயர்வடைந்து 65,741.64 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை ஏற்றத்துடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 240 புள்ளிகள் உயர்வடைந்து 65,584 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 76 புள்ளிகள் உயர்ந்து 19,454 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:36 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 397.47 புள்ளிகள் உயர்வடைந்து 65,741.64 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119.45 புள்ளிகள் உயர்ந்து 19,475.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் சாதகமான சூழல், வலுவான வெளிநாட்டு நிதி வரவு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. பெரும்பான்மையான பங்குகள் உயர்வில் விற்பனையாகின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் பின்சர்வ், மாருதி சுசூகி, கோடாக் மகேந்திரா பேங்க் பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, நெஸ்ட்லே இந்தியா, டெக் மகேந்திரா, டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் ஏற்றதில் இருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE