ஏற்ற இறக்கமின்றி பங்குச்சந்தை நிறைவு: சென்செக்ஸ் 33 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை ஏற்ற இறக்கமின்றி தட்டையாக நிறைவடைந்தன. சென்செக்ஸ் 33 புள்ளிகள் (0.05 சதவீதம்) சரிவடைந்து 65,446 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9 புள்ளிகள் (0.05 சதவீதம்) உயர்ந்து 19,389 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தைகள் புதன்கிழமை சரிவுடன் தொடங்கின. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 91 புள்ளிகள் சரிவடைந்து 65,387 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 23 புள்ளிகள் சரிந்து 19,365 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் எதிர்மறை சூழல், ஹெச்டிஎஃப்சி இரட்டைப் பங்குகளின் வீழ்ச்சி காரணமாக நிலையில்லாமல் பயணித்த இன்றைய பங்குச்சந்தை தங்களின் தொடர் லாப உச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 33.01 புள்ளிகள் சரிவடைந்து 65,446.04 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.50 புள்ளிகள் உயர்ந்து 19,398.50 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை மாருதி சுசூகி, இன்டஸ்இன்ட் பேங்க், டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், இன்போசிஸ், பாரதி ஏர்டெல் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன.

ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின்சர்வ், விப்ரோ, டாடா மோட்டர்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE