மீண்டும் புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தை: சென்செக்ஸ் 803 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 803 புள்ளிகள் (1.26 சதவீதம்) உயர்வடைந்து 64,718 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 216 புள்ளிகள் (1.14 சதவீதம்) உயர்ந்து 19,189 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை புதிய உச்சம் தொட்டு தொடங்கியது. காலை 10:10 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 432.181 புள்ளிகள் உயர்வடைந்து 64,347.60 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 106.00 புள்ளிகள் உயர்ந்து 19,078.10 ஆக இருந்தது.

அரையாண்டின் (காலண்டர் ஆண்டு) கடைசி வாரத்தின் இறுதி வர்த்தக நாளில் ஆட்டோ, தகவல் தொழில்நுட்பம், மூலதனபொருள்கள் பங்குகளின் ஏற்றத்தால் இந்திய பங்குச்சந்தைகள் அதன் புதிய உச்சத்தில் நிறைவடைந்தன. அனைத்து பங்குகளும் ஏற்றம் பெற்றிருந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 803.14 புள்ளிகள் உயர்வடைந்து 64,718.56 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 216.90 புள்ளிகள் உயர்ந்து 19,189 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ், மாருதி சுசூகி, எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டெக் மகேந்திரா, விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, டாடா மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், கோடாக் மகேந்திரா பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் உயர்வடைந்திருந்தன. ஐசிஐசிஐ, என்டிபிசி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE