பங்குச்சந்தை | சென்செக்ஸ் 130 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.90 புள்ளிகள் உயர்வடைந்து 63,100.90 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று(செவ்வாய்க்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 223 புள்ளிகள் உயர்வடைந்து 63,193 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 18,760 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 09:48 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 130.90 புள்ளிகள் உயர்வடைந்து 63,100.90 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 44.15 புள்ளிகள் உயர்ந்து 18,735.35 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் கலவையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் வார இரண்டாவது நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், விப்ரோ, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, ஹெச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, பவர்கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டிசிஎஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டெக் மகேந்திரா, ஹெச்சிஎஸ் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE