ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்த பங்குச்சந்தை

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகள் திங்கள்கிழமை ஏற்ற இறக்கமின்றி நிறைவடைந்தன. சென்செக்ஸ் 9 புள்ளிகள் (0.01 சதவீதம்) சரிவடைந்து 62,9700 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25 புள்ளிகள் (0.14 சதவீதம்) உயர்ந்து 18,691 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் தொடங்கியது என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவடைந்தது காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 18.49 புள்ளிகள் சரிவடைந்து 62,960.88 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.25 புள்ளிகள் சரிந்து 18, 662.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலப்பு சூழல் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகம் நிலையில்லாமலே பயணித்தது. ஆட்டோ, சுகதாரப் பங்குகளின் உயர் பங்குச்சந்தைகளின் சரிவினை குறைத்ததது. என்றாலும் முரணாக முடிவடைந்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 9.37 புள்ளிகள் சரிவடைந்து 62,970.00 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 25.70 புள்ளிகள் உயர்ந்து 18,691.20 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், மாருதி சுசூகி, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், டைட்டன் கம்பெனி, நெஸ்ட்லே இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பங்குகள் உயர்வடைந்திருந்தன.

என்டிபிசி, டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர்கிரிடு கார்ப்பரேஷன், பாரதி ஏர்டெல், ஹெட்டிஎஃப்சி பேங்க், எல் அண்ட் டி, கோடாக் மகேந்திரா பேங்க், டெக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE