பங்குச்சந்தை | சென்செக்ஸ் 18 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 18.49 புள்ளிகள் சரிவடைந்து 62,960.88 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று(திங்கள்கிழமை) சற்று ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 75 புள்ளிகள் உயர்வடைந்து 63,055 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 18,682 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சிறிய ஏற்றத்துடன் தொடங்கியது என்றாலும் வர்த்தகத்தின்போது சரிவடைந்தது. காலை 10:22 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 18.49 புள்ளிகள் சரிவடைந்து 62,960.88 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 3.25 புள்ளிகள் சரிந்து 18, 662.25 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வார முதல்நாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், இன்டஸ்இன்ட் பேங்க், டாடா மோட்டார்ஸ், ஐடிசி, டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், மாருதி சூசுகி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் உயர்வில் இருந்தன.

டிசிஎஸ், டாடா ஸ்டீல், என்டிபிசி, பாரதி ஏர்டெல், பவர்கிரிடு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டெக் மகேந்திரா ஹெடிஎஃப்சி எல் அண்ட் டி, ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE