பங்குச்சந்தை: சென்செக்ஸ் 50 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வியாழக்கிழமை) சரிவுடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 99 புள்ளிகள் சரிவடைந்து 63,423 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி19 புள்ளிகள் சரிந்து 18,837 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் இன்று சரிவுடன் தொடங்கி நிலையில்லாமல் சென்றது. காலை 10:03 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 50.16 புள்ளிகள் சரிவடைந்து 63,472.99 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.65 புள்ளிகள் சரிந்து 18,847.20 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல்கள் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை எம் அண்ட் எம், ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, மாருதி சுசூகி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க் பங்குகள் உயர்வில் இருந்தன.

டாடா ஸ்டீல், இன்போசிஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், பஜாஜ் பைனான்ஸ், என்டிபிசி, விப்ரோ, இன்டஸ்இன்ட் பேங்க், கோடாக் மகேந்திரா பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமென்ட், ஏசியன் பெயின்ட்ஸ் பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE