சென்செக்ஸ் 310 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 310 புள்ளிகள் (0.49 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 62,917 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67 புள்ளிகள் (0.36 சதவீதம்) சரிந்து 18,688 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது மெல்ல உயரத் தொடங்கியது. காலை 10:01 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 10.25 புள்ளிகள் உயர்வடைந்து 63,238.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20.50 புள்ளிகள் உயர்ந்து 18,776.40 ஆக இருந்தது.

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு ஏற்படுத்திய அச்சம், நிதி, வங்கி மற்றும் தகவல்தொழில்நுட்பப் பங்குகள் சரிவு, வர்த்தகத்தின் பிற்பாதியில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் மூன்றுநாள் லாபத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இன்று வீழ்ச்சியில் நிறைவடைந்தது.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 310.88 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 62,917.63 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 67.80 புள்ளிகள் வீழ்ந்து 18,688.10 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை நெஸ்ட்லே இந்தியா, எம் அண்ட் எம், ஏசியன் பெயின்ட்ஸ், ஐடிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், மாருதி சுசூகி, பஜாஜ் ஃபைனான்ஸ், டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், டைட்டன் கம்பெனி பங்குகள் உயர்வடைந்து இருந்தன.

இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, கோடாக் மகேந்திரா பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE