பங்குச்சந்தை | சென்செக்ஸ் 90 புள்ளிகள் சரிவு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (புதன்கிழமை) சற்றே ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 41 புள்ளிகள் உயர்வடைந்து 63,184 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 20 புள்ளிகள் உயர்ந்து 18,737 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் குறைவான ஏற்றத்துடன் தொடங்கின என்றாலும் வர்த்தகத்தின் போது சரிவைச் சந்தித்தது. காலை 10:02 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 90.43 புள்ளிகள் சரிவடைந்து 63,052.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.60 புள்ளிகள் சரிந்து 18,707.55 ஆக இருந்தது.

அமெரிக்காவின் மே மாத பணவீக்கம் வீழ்ச்சியை சந்தித்திருக்கும் நிலையிலும் இந்திய பங்குச்சந்தைகள் இன்று குறைவான லாபத்துடன் வர்த்தகத்தைத் தொடங்கின. முதலீட்டாளர்கள் மத்திய வங்கியிடமிருந்து சாதகமான கொள்கை முடிவுகளை எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா ஸ்டீல், பவர் கிரிடு கார்ப்பரேஷன், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட் பங்குகள் உயர்வில் இருந்தன. பாரதி ஏர்டெல், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, கோடாக் மகேந்திரா, எம் அண்ட் எம், டைட்டன் கம்பெனி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE