சென்செக்ஸ் 418 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 418 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயர்வடைந்து 63,143 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114 புள்ளிகள் (0.62 சதவீதம்) உயந்து 18,716 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 328.21 புள்ளிகள் உயர்வடைந்து 63,052.92 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 90.10புள்ளிகள் உயர்ந்து 18,691.60 ஆக இருந்தது.

மே மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 4.5 சதவீதமாக குறைந்திருப்பதும், ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி குறியீடு 4.2 சவீதமாக உயர்ந்திருப்பதும் இந்திய பங்குச்சந்தைகளில் உணர்வுகளைத் தூண்ட உதவியது இதனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக பங்குச்சந்தைகள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் நிறைவு செய்தன.

இன்றைய வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 418.45 புள்ளிகள் உயர்வடைந்து 63,143.16 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 114.70 புள்ளிகள் உயர்ந்து 18,716.20ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் கம்பெனி, ஐடிசி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட் டி, டெக் மகேந்திரா, பவர் கிரிடு கார்ப்பரேஷன், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வடைந்திருந்தன.

கோடாக் மகேந்திரா, எம் அண்ட் எம், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, டாடா மோட்டார்ஸ், பாரதி ஏர்டெல், மாருதி சுசூகி, என்டிபிசி, டிசிஎஸ், விப்ரோ பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE