பங்குச்சந்தை | சென்செக்ஸ் 36 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (திங்கள்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 131 புள்ளிகள் உயர்வடைந்து 62,757 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 37 புள்ளிகள் உயர்ந்து 18,600 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 09:52 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 36.11 புள்ளிகள் உயர்வடைந்து 62,661.74 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 32.30 புள்ளிகள் உயர்ந்து 18,595.70ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய கலவையான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின. முதலீட்டாளர்கள் நுகர்வோர் சில்லரை பணவீக்கத்திற்காகவும், ஏப்ரல் மாதத்திற்கான ஐஐபி தரவுகளுக்காகவும் காத்திருக்கின்றனர்.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், பாரதி ஏர்டெல், நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், எம் அண்ட் எம், ஐசிஐசிஐ பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், விப்ரோ பங்குகள் உயர்வில் இருந்தன.

எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், மாருதி சுசூகி, கோடாக் மகேந்திரா பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE