பங்குச்சந்தை | சென்செக்ஸ் 77 புள்ளிகள் உயர்வு

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 94 புள்ளிகள் உயர்வடைந்து 62,942 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 29 புள்ளிகள் உயர்ந்து 18,664 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. காலை 10:07 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 77.89 புள்ளிகள் உயர்வடைந்து 62,926.53 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி
10.80 புள்ளிகள் சரிந்து 18,623.75 ஆக இருந்தது.

உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்களுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி வர்த்தகத்தை ஏற்றத்துடன் தொடங்கின, என்ற போதிலும் வர்த்தக நேரத்தின் போது ஏற்ற இறக்கமின்றி பயணிக்கத் தொடங்கியது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை இன்டஸ்இன்ட் பேங்க், டைட்டன் கம்பெனி, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டாடா மோட்டார்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், நெஸ்ட்லே இந்தியா, ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎஃப்சி பேங்க், பவர் கிரிடு கார்ப்பரேஷன், மாருதி சுசூகி, ஹெச்டிஎஃப்சி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐடிசி பங்குகள் உயர்வில் இருந்தன. டாடா ஸ்டீல், இன்போசிஸ், எம் அண்ட் எம், ஹிந்துஸ்தான் யுனிலீவர், விப்ரோ, டெக் மகேந்திரா, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, என்டிபிசி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், பாரதி ஏர்டெல், டிசிஎஸ், ஐடிசி பங்குகள் சரிவில் இருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE